என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரியபாளையம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து சிறுமி பலி
- தாராசந்த் பாண்டேவின் மகள் பத்மினி பெஹாரா விளையாடிக் கொண்டிருந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியில் ரூபி பிரிக்ஸ் சேம்பர் என்ற தனியார் செங்கல் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.
இதில், ஒடிசா மாநிலம்,பலாங்கீர் மாவட்டம்,மால்பார கிராமத்தைச் சேர்ந்த தாராசந்த் பாண்டே என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கடந்த இரண்டு மாதங்களாக இங்கே வந்து தங்கி இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில்,நேற்று மாலை இங்குள்ள தண்ணீர் தொட்டியில் தாராசந்த் பாண்டேவின் மகள் பத்மினி பெஹாரா(வயது 4) விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக அவள் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து மூழ்கினாள். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் சோபாகினி பெஹாரா பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.எனவே,போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்