என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரவள்ளூரில் 5 மாத கர்ப்பிணி தற்கொலை
- வீட்டில் தனியாக இருந்த ஜெயஸ்ரீ திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து பெரவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
பெரவள்ளுர், ஜி.கே.எம் காலனி, 28-வது தெருவை சேர்ந்தவர் பிரசன்னா. அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (வயது29). இவர்களுக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது ஜெயஸ்ரீ 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜெயஸ்ரீ திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து பெரவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story