search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர்- பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் மறியல்
    X

    பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல் செய்த காட்சி.

    பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர்- பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் மறியல்

    • பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மழுவங்கரணை கிராமம் வழியாக சென்ற அரசு பஸ் வழிமடக்கி சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மாணவிகளிடம் சில்மிஷம் செய்த டிரைவர் அல்லாபக்கஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

    திருவண்ணாமலை:

    வந்தவாசியில் இருந்து ஓரத்தி கிராமத்திற்கு அரசு பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ் டிரைவராக அல்லாபக்கஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

    பஸ்சில் மழுவங்கரனை கிராமத்திலிருந்து நாள்தோறும் ஏராளமான பள்ளி மாணவிகள் வந்தவாசி அரசு பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

    டிரைவர் அல்லாபக்கஷ் பஸ்சில் பயணம் செய்யும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்து வந்துள்ளார். இதனை மாணவிகள் அழுது கொண்டு வீட்டில் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மழுவங்கரணை கிராமம் வழியாக சென்ற அரசு பஸ் வழிமடக்கி சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது மாணவிகளிடம் சில்மிஷம் செய்த டிரைவர் அல்லாபக்கஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

    தகவல் அறிந்த அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டிரைவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×