என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூட்டி கிடக்கும் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
    X

    பூட்டி கிடக்கும் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

    • ஓர் ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி கிடப்பதால் இந்த உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காவை சுற்றி முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.
    • அரசு அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடக்கும்.

    கடம்பத்தூர்:

    பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் பூட்டி கிடக்கும் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டது பாப்பரம்பாக்கம் ஊராட்சி. பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் ரூ.30 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டது. இந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அந்த பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வந்தனர். இந்த பூங்காவில் சிறுவர், சிறுமியர்கள் விளையாட இரும்பினாலான ஊஞ்சல், சறுக்கு போன்ற பல்வேறு உபகரணங்களும், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய தனியாக நவீன உடற்பயிற்சி எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளது.

    இது கடந்த ஓராண்டுக்கும் மேலாக பூட்டியே இருப்பதால் அனைத்து உபகரணங்களும் துருப்பிடித்து பாழாகி வீணாகி போகும் நிலை உள்ளது.

    ஓர் ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி கிடப்பதால் இந்த உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காவை சுற்றி முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. எனவே அரசு அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடக்கும் இந்த உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காவை உடனடியாக சீரமைத்து வாலிபர்கள், முதியவர்கள், சிறுவர்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×