என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி அருகே மரத்தின் மீது கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலி
    X

    பழனி அருகே மரத்தின் மீது கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலி

    • மூகாம்பிகை நகர் அருகே சாலையோரம் இருந்த மரத்தில் கார் பயங்கரமாக மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    பழனி அருகே உள்ள கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் குணசுந்தர் (வயது 55). இவரது மனைவி சண்முகப்பிரியா (45). இவர்களுக்கு தர்மேஸ்குமார் (25), ரஞ்சித்குமார் (19) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். குணசுந்தர் தனது குடும்பத்தினருடன் திருச்சியில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று தனது காரில் சென்றார்.

    இவர்களுடன் உறவினரான இந்திராநகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி நிர்மலா (70) என்பவரும் சென்றார். காரை குணசுந்தர் ஓட்டி வந்துள்ளார்.

    சாமி தரிசனம் செய்து முடித்து விட்டு அவர்கள் பழனி நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர். நள்ளிரவு நேரத்தில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது மூகாம்பிகை நகர் அருகே சாலையோரம் இருந்த மரத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் குணசுந்தர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மற்ற அனைவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் விபத்தை பார்த்து உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். உயிருக்கு போராடிய நிர்மலா தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற அனைவரும் சிகிச்சையில் உள்ளனர்.

    இது குறித்து பழனி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×