என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏழைகள் பயன்பெறும் வகையில் மறுபயன்பாட்டு மையம்
    X

    ஏழைகள் பயன்பெறும் வகையில் மறுபயன்பாட்டு மையம்

    • பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய ஆடைகள், ஷு, செருப்பு, மற்றும் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வைத்து செல்கிறார்கள்.
    • பொதுமக்களும் முழுவதுமாக பயன்படுத்தாத பொருட்களை மையத்தில் வைத்து செல்வதால் குவிந்து வருகின்றன.

    பொன்னேரி:

    மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏழைகள் பயன்பெறும் வகையில் பொதுமக்கள் பயன்டுத்திய ஆடைகள் மற்றும் பொருட்களை வழங்கும் வகையில் மறுபயன்பாடு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த மையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 4 இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய ஆடைகள், ஷு, செருப்பு, மற்றும் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வைத்து செல்கிறார்கள். இதனை தேவைப்படும் ஏழை எளியோர்கள் இலவசமாக எடுத்து செல்லாம். இதற்காக ஏற்பாடுகளை மீஞ்சூர் பேரூராட்சி செய்து உள்ளது. பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாக சென்றும் பொருட்கள் மற்றும் ஆடைகளை பெற்று மறுசுழற்சி பயன்பாட்டு மையத்தில் சேகரித்து வைக்கின்றனர். பொதுமக்களும் முழுவதுமாக பயன்படுத்தாத பொருட்களை மையத்தில் வைத்து செல்வதால் குவிந்து வருகின்றன. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு கூறும்போது, பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தாத பொருட்கள், உடைகளை சேகரித்து இந்த மையத்தில் வைத்து வருகிறார்கள். வறுமையில்வாடும் ஏழை எளியவர்கள் வந்து தேவையானவற்றை எடுத்து செல்லலாம். இதனால் வீடுகளில் பழைய பொருட்கள் குறையும். அது மற்றவர்களுக்கு பயன்படும் அளவிலும் அமைந்து உள்ளது. பேரூராட்சி அலுவலகத்திற்கு போன் செய்தால் தூய்மைப் பணியாளர்கள் வீட்டுக்கு சென்று பொருட்களை வாங்கி செல்வார்கள் என்றார்.

    Next Story
    ×