என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாவலூர் அருகே தண்ணீர் லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி
- விபத்து நடந்ததும் தண்ணீர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
- பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
திருப்போரூர்:
தாம்பரத்தை அடுத்த வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது27)எலக்ட்ரீசியன்.
நேற்றுஇரவு அவர் தாழம்பூர் கூட்டு ரோட்டில் இருந்து நாவலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அதே சாலையில் சென்றுக் கொண்டிருந்த தண்ணீர் லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த மோட்டர் சைக்கிளில் மோதி பிரவீன் குமார் கிழே விழுந்தார். அந்தநேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி பிரவீன் குமார் மீது மோதியது.
இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய பிரவீன் குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் தாழம்பூர் போலீசார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து விசாரணைநடத்தினர்.
பலியான பிரவீன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்ததும் தண்ணீர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.






