என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாமகிரிப்பேட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து கணவன்-மனைவி பலி
- கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பச்சுடையாம்பாளையம் ஊராட்சி குருவாலா அருகே உள்ள மூலக்காடு குமாரபாளையத்தார் தோட்டத்தை சேர்ந்தவர் சிவகுமார்(வயது 53). விவசாயி. இவரது மனைவி கீதா (39). இவர்களுக்கு பிரதீவ் (19) என்ற மகன் உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சிவகுமார் தனது ஊரின் அருகாமையில் உள்ள தோட்டத்தில் தாக்காளி சாகுபடி செய்துள்ளார். கோடை காலம் என்பதால் மழை மற்றும் காற்றில் செடிகள் சாயாமல் இருப்பதற்காக கணவன், மனைவி இருவரும் டிராக்டர் மூலம் குச்சிகளை தோட்டத்திற்கு கொண்டு போய் போட்டுள்ளனர்.
பின்னர் வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு டிராக்டர் மூலம் சென்றுள்ளனர். அப்போது கீதா டிராக்டரை ஓட்டிச் சென்றார். சேறும், சகதியுமாக இருந்த மண்பாதையில் சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று வயலுக்குள் சென்று கவிழ்ந்தது.
இதில் சிவக்குமாரும், அவரது மனைவி கீதாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டனர். இது பற்றி நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சிவகுமார்-கீதா ஆகியோர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இது பற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்