என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயாம் சிங் யாதவ் மறைவு- யாதவ சமூகத்தினர் அஞ்சலி
    X

    உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயாம் சிங் யாதவ் மறைவு- யாதவ சமூகத்தினர் அஞ்சலி

    • முலாயாம் சிங் யாதவ் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • ஒன்றிய தலைவர் சுந்தரம்யாதவ், செயலாளர் முத்து யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயாம் சிங் யாதவ் மறைவையொட்டி தமிழ்நாடு யாதவ மகாசபை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் சார்பில் பொன்னேரி அண்ணா சிலை அருகே அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்டத் தலைவர் கோகுல சேகர் யாதவ் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதில் ஒன்றிய தலைவர் சுந்தரம்யாதவ், செயலாளர் முத்து யாதவ், சேர்மன் ரவி, மாவட்ட துணை செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனியாதவ், ஒன்றிய பொருளாளர் தயாளன் யாதவ், சத்யஜோதி பள்ளி தாளாளர் ஆனந்தபாபு, இளைஞர் அணி ஞானப்பிரகாஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×