search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீஞ்சூர் அருகே காண்டிராக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    மீஞ்சூர் அருகே காண்டிராக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    • மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேஷ்.
    • மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேஷ், காண்டிராக்டரான இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு வெளியூர் சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4½ பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியினை வைத்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×