search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கக்கூடாது- அமைச்சர் பொன்முடி பேட்டி
    X

    மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கக்கூடாது- அமைச்சர் பொன்முடி பேட்டி

    • தமிழ்நாட்டில் வருகிற கல்வி ஆண்டு முதல் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2 பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும்.
    • கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் பலருக்கு வேலை கொடுப்பவர்களாக மாறவேண்டும்.

    விழுப்புரம்:

    அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளான ஆரணி, காஞ்சிபுரம், பண்ருட்டி, திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா இன்று காலை விழுப்புரத்தில் நடந்தது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று 1144 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    கல்லூரியில் படிக்கும் போதே மாணவ-மாணவிகள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் முன்னேறுவதற்காகத்தான் நாம் முதல்வன் என்ற திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ்மொழிக்கு, அதுவும் தாய்மொழிக்கு ஆபத்து என்றால் முதலில் குரல் கொடுப்பது திராவிட கட்சிகள்தான். திராவிட கட்சிகள் இல்லையென்றால் என்றைக்கோ தமிழ்மொழி மறைந்திருக்கும், மறைத்தும் இருப்பார்கள்.

    தமிழ்நாட்டில் வருகிற கல்வி ஆண்டு முதல் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2 பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும். கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் பலருக்கு வேலை கொடுப்பவர்களாக மாறவேண்டும். அதற்கு தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.

    நாங்கள் புதிய கல்வி கொள்கைக்கு எதிரானவர்கள் அல்ல. மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை திட்டத்தில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை கொண்டு வருகிறது. இந்த தேர்வு தேவையற்றது. 3-வது மொழியாக இந்திமொழியை மத்திய அரசு திணிக்கக்கூடாது. அதற்கு பதிலாக மாணவர்கள் விருப்பப்படிதேர்வு செய்யலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×