என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூரில் லாரி மீது பஸ் மோதி விபத்து- அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பலி
    X

    மேட்டூரில் லாரி மீது பஸ் மோதி விபத்து- அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பலி

    • மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக தனியார் பஸ் மோதியது.
    • விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் மேட்டூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சேலத்திற்கு, நேற்று இரவு 11 மணியளவில் தனியார் பஸ் புறப்பட்டது. பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக தனியார் பஸ் மோதியது.

    இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. பஸ்சில் பயணம் செய்த அரசு போக்குவரத்துக்கழக டிரைவர் மனோகரன் (வயது 48), திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி வெங்கடேஷ் (45) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கருமலைக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்து காரணமாக அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது. போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.

    தொடர்ந்து விபத்தில் பலியான மனோகரன், வெங்கடேஷ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த விஜயகுமார், சந்தோஷ்குமார், ஹரீஷ் உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் நடந்த விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் மேட்டூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×