என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 102.22 அடியாக சரிவு
- காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைவால் அணைக்கான நீர்வரத்தும் குறைவாக உள்ளது.
- நேற்று வினாடிக்கு 579 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 465 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன குறுவை சாகுபடிக்கு, நேற்று முன்தினம் முதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நேற்று 102.86 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 102.22 அடியாக சரிந்தது.
மேலும், காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைவால் அணைக்கான நீர்வரத்தும் குறைவாக உள்ளது. நேற்று வினாடிக்கு 579 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 465 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
Next Story






