என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,260 கனஅடியாக அதிகரிப்பு
- மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று விநாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,098 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,260 கனஅடியாக அதிகரித்தது. மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் நேற்று 103.27 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 103.23 அடியாக சரிந்துள்ளது.
Next Story






