என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- நேற்று அணையின் நீர்மட்டம் 103.60 அடியாக இருந்தது. இன்றும் அதே நிலையில் நீடிக்கிறது.
மேட்டூர்:
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாக நீடிக்கிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று விநாடிக்கு 993 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 1,155 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 103.60 அடியாக இருந்தது. இன்றும் அதே நிலையில் நீடிக்கிறது.
Next Story






