என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1304 கன அடியாக அதிகரிப்பு
- மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் அப்படியே நீடிக்கிறது.
- இனிவரும் நாட்களில் நீர்வரத்து அதிகரித்தால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 1154 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 1304 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் ஆயிரம் கன அடி கண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் அப்படியே நீடிக்கிறது.
நேற்று 103.7 1அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்றும் அதே அளவில் உள்ளது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து அதிகரித்தால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது.
Next Story






