என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு
    X

    மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு

    • மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட கண்ணதாசன் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகலட்சுமி.
    • நாகலட்சுமி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட கண்ணதாசன் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகலட்சுமி (வயது 60), இவர் தனது பேத்தியை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக மறைமலைநகர் கம்பர் தெரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நாகலட்சுமி அணிந்து இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து நாகலட்சுமி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×