என் மலர்
உள்ளூர் செய்திகள்

மறைமலைநகர் அருகே மது விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது
- கோனாதி ரெயில்வே கேட் பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- மது விற்ற பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறைமலைநகர்:
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியை அடுத்த கோனாதி ரெயில்வே கேட் பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் ரோந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு பெண்கள் மது விற்பனை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் காட்டாங்கொளத்தூர் திருப்பாணாழ்வார் தெருவைச்சேர்ந்த பானுமதி (வயது 50), வள்ளி (57), சித்ரா (40) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 19 மதுப் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தைச்சேர்ந்த மணி (32) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 37 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






