என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி, கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை
- பலத்த காற்று வீசியதால் கொடைக்கானல் நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் பெயர்ந்து விழுந்தன.
- சாரல் மழை காரணமாக ஏரியில் படகு சவாரி செய்ய யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையிலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இருந்தபோதும் கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.
கொடைக்கானலில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் வத்தலக்குண்டு ரோடு, பழனி ரோடு பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து போக்குவரத்து தடைபட்டது. அந்த இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வனத்துறையினர் சென்று முறிந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பலத்த காற்று வீசியதால் கொடைக்கானல் நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் பெயர்ந்து விழுந்தன. சாரல் மழை காரணமாக ஏரியில் படகு சவாரி செய்ய யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பெரும்பாலான சுற்றுலா தலங்களும் வெறிச்சோடியே காணப்பட்டது.
இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்