என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இளம்பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்ற வழிபாட்டுத்தல ஊழியர் கைது
- வழிபாட்டுத்தல ஊழியர், உள்ளே சென்ற இளம்பெண் மீது தண்ணீரை தெளித்து, தொட்டு துடைப்பது போல் கபட நாடகமாடி அத்துமீறி நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
- அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தனது குழந்தையை தூக்கி கொண்டு அலறியடித்து வெளியே ஓடி வந்து தனக்கு நேர்ந்த விபரீத சம்பவத்தை கணவரிடம் கூறினார்.
தூசி:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த பல்லாவரம் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியரின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது.
அவர்கள் தங்களின் குழந்தைக்கு தண்ணீர் மந்திரித்து தெளிப்பதற்காக, அருகில் உள்ள ஒரு வழிபாட்டுத் தலத்துக்கு நேற்று முன்தினம் குழந்தையைத் தூக்கி சென்றனர். அங்கு, தண்ணீர் மந்திரித்துத் தெளிக்கும் ஊழியரான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அந்த இளம்பெண்ணிடம் உனது கணவரை வெளியே இருக்கச் சொல்லி விட்டு நீ மட்டும் உள்ளே வா என்றார்.
அதன்படி இளம்பெண் கணவரை வெளியே இருக்கச் சொல்லி விட்டு தனது குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு வழிபாட்டுத்தலத்துக்குள் சென்றார்.
அப்போது வழிபாட்டுத்தல ஊழியர், உள்ளே சென்ற இளம்பெண் மீது தண்ணீரை தெளித்து, தொட்டு துடைப்பது போல் கபட நாடகமாடி அத்துமீறி நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தனது குழந்தையை தூக்கி கொண்டு அலறியடித்து வெளியே ஓடி வந்து தனக்கு நேர்ந்த விபரீத சம்பவத்தை கணவரிடம் கூறினார்.
இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் தூசி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து, வழிபாட்டுத்தல ஊழியரை கைது செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்