என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்மிடிப்பூண்டியில் நாளை மின் தடை
    X

    கும்மிடிப்பூண்டியில் நாளை மின் தடை

    • கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி.
    • குப்பம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் நாளை மின் சப்ளை தடைபடும்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தின் பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி பகுதியில் நாளை (சனிக்கிழமை) மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படுகிறது.

    இதனால் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி, கோட்டக்கரை, பிரித்விநகர், முனுசாமிநகர், பூபாலன்நகர், மா.பொ.சி.நகர், பாலகிருஷ்ணாபுரம், தேர்வழி, ரெட்டம்பேடு சாலை, பெரிய நத்தம், வழுதிலம்பேடு, தம்புரெட்டிபாளையம், அப்பாவரம், மங்காவரம், ஆத்துப்பாக்கம், குருவியகரம், சோழியம்பாக்கம், ஏனாதி மேல்பாக்கம், அயநல்லூர், வேற்காடு, பெத்திக்குப்பம், சாமிரெட்டி கண்டிகை, பாப்பன்குப்பம், சித்தராஜ கண்டிகை, குருவராஜகண்டிகை ஆகிய பகுதிகளில் மின் சப்ளை இருக்காது.

    அதே போல் கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு பகுதி, புதுகும்மிடிப்பூண்டி, பைபாஸ் சாலை, சிப்காட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கங்கன்தொட்டி, பாப்பான் குப்பம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் நாளை (சனிக்கிழமை) மின் சப்ளை தடைபடும்.

    இந்த தகவலை மின்துறை உதவி செயற்பொறியாளர் முரளி தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×