என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரவாயல் விபத்தில் பெண் என்ஜினீயர் பலி: லாரி-வேன் டிரைவர்கள் கைது
    X

    மதுரவாயல் விபத்தில் பெண் என்ஜினீயர் பலி: லாரி-வேன் டிரைவர்கள் கைது

    • போரூரை சேர்ந்தவர் ஷோபனா(வயது22) சாப்ட்வேர் என்ஜினீயர்.
    • பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    பூந்தமல்லி:

    போரூரை சேர்ந்தவர் ஷோபனா(வயது22) சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் நேற்று காலை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் தனது தம்பியை பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். நொளம்பூர் அருகே மதுரவாயல் பைபாஸ் சாலை, சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது வேன் உரசியதால் அவர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.

    அப்போது பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி ஷோபனா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்த நிலையில் விபத்துக்கு காரணமான வேன் மற்றும் லாரி டிரைவர்கள் மோகன், பார்த்திபன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×