என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மடத்துக்குளம் அருகே மது அருந்தி புரோட்டா சாப்பிட்ட வாலிபர் மரணம்
- சிறிது நேரத்தில் நெஞ்சு எரிச்சலாக இருக்கிறது என்று கூறிய ஸ்டாலின் மயங்கி விழுந்தார்.
- ஸ்டாலின் உயிரிழப்புக்கு மது போதை காரணமா?அல்லது புரோட்டா காரணமா? என்பது குறித்த விவரம் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுக்குப் பிறகு தெரிய வரும்.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த துங்காவி ஆர். ஜி. புதூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஸ்டாலின் (வயது 27). இவர் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை சேகரித்து பெரியபட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு கொண்டு போய் சேர்க்கும் வேலை செய்து வந்தார்.
இவருக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. சம்பவத்தன்று ஸ்டாலின் தன்னுடன் வேலை செய்யும் நண்பர் சிவக்குமார் என்பவருடன் துங்காவி பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளார். பின்னர் அங்குள்ள கடையில் புரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது குடிப்பதற்கு ஐஸ் வாட்டர் வேண்டும் என்று கேட்டு வாங்கி குடித்துள்ளார். இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் நெஞ்சு எரிச்சலாக இருக்கிறது என்று கூறிய ஸ்டாலின் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கணியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்டாலின் உயிரிழப்புக்கு மது போதை காரணமா?அல்லது புரோட்டா காரணமா? என்பது குறித்த விவரம் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுக்குப் பிறகு தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்