search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கல் லோடு ஏற்றிய லாரி ஏரியில் கவிழ்ந்து விபத்து: டிரைவர்-2 தொழிலாளர்கள் பரிசல் மூலம் மீட்பு
    X
    ஏரியில் மூழ்கிய தொழிலாளர்கள் பரிசல் மூலம் மீட்கப்பட்ட காட்சி.

    செங்கல் லோடு ஏற்றிய லாரி ஏரியில் கவிழ்ந்து விபத்து: டிரைவர்-2 தொழிலாளர்கள் பரிசல் மூலம் மீட்பு

    • கவுந்தப்பாடி மற்றும் பவானியில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
    • பின்னர் ஏரியில் சிக்கி தவித்த மணி, ஜானகியை மீட்க போராடினர்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து இன்று அதிகாலை 3:30 மணியளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரிக்கு செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கிளம்பியது. லாரியை சுப்பிரமணி என்பவர் ஓட்டினார்.

    லாரியில் செங்கல் சூலை தொழிலாளர்கள் மணி மற்றும் ஜானகி பயணம் செய்தனர். லாரி ஆப்பக்கூடல் அடுத்த கூத்தம்பூண்டி ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓட தொடங்கிய லாரி கட்டுப்பாட்டை இழந்து கூத்தம்பூண்டி ஏரிக்குள் கவிழ்ந்தது.

    இதில் லாரி டிரைவர் சுப்பிரமணி நீச்சல் அடித்து கொண்டு ஏரியிலிருந்து கரை ஏறினார். பின்னர் சுப்பிரமணி அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக கவுந்தப்பாடி மற்றும் பவானியில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. பின்னர் ஏரியில் சிக்கி தவித்த மணி, ஜானகியை மீட்க போராடினர். எனினும் முடியவில்லை இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பரிசல் ஓட்டிகளை உதவியுடன் மணி, ஜானகி 2 பேரையும் பத்திரமாக ஏரியில் இருந்து மீட்கப்பட்டனர்.

    இதனையடுத்து அங்கு தயாராக இருந்த 108 மருத்துவ உதவியாளர்கள் கோகுலப்பிரியன், தாமோதரன் ஆகியோர் மணி மற்றும் ஜானகிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    Next Story
    ×