என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 பேர் பலி
    X

    கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 பேர் பலி

    • விபத்தில் 2 பைக்குகளும் மோதிக்கொண்டதில் சபரி மற்றும் ஹர்ஷா ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி பகுதியைச் சேர்ந்தவர் சபரி (வயது24), கர்நாடக மாநிலம் பொம்மச்சந்திரா பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா, மத்திகிரி பகுதியை சேர்ந்தவர் நோபிக் மற்றும் ஒருவர் என 4 பேர் 2 இருசக்கர வாகனத்தில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    அப்போது இன்று அதிகாலையில் கிருஷ்ணகிரி அருகே ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பந்தாரப்பள்ளி என்ற இடத்தில் கண் இமைக்கும் நேரத்தில் 2 பேரும் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டு சாகசத்தில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் 2 பைக்குகளும் மோதிக்கொண்டதில் சபரி மற்றும் ஹர்ஷா ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    நோபிக் என்பவர் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×