search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 40 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தை முன்னிறுத்தி போட்டியிட உள்ளது- கே.பி.ராமலிங்கம்
    X

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 40 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தை முன்னிறுத்தி போட்டியிட உள்ளது- கே.பி.ராமலிங்கம்

    • வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 40 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தை முன்னிறுத்தி போட்டியிட உள்ளது.
    • சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தற்பொழுது முயற்சித்து வருகிறது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட பா.ஜனதா சார்பில் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதா மாநில துணைத் தலைவர் முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டார். அப்பொழுது வருகிற ஜனவரி 2-ம் தேதி தருமபுரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு கொடுத்து குறித்து குழுக்கள் அமைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார்.

    உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படக்கூடியவர், அவர் அமைச்சராக வேண்டும் என்று எல்லோரும் கூறி வந்தார். அப்படி என்றால் தற்பொழுது ஸ்டாலினால் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இருப்பவர்கள் யாரும் செயல்படாதவர்கள், திறமை இல்லாதவர்கள் என்று தான் அர்த்தம்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 40 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தை முன்னிறுத்தி போட்டியிட உள்ளது. சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தற்பொழுது முயற்சித்து வருகிறது. ஒரு வேளை கூட்டணி சேர்ந்தால் தான் தி.மு.க.வை அழிக்க முடியும் என்ற நிலை உருவானால் அப்பொழுது அதைப் பற்றி பேசுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×