search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பட்டணம் அருகே குடிபோதையில் நண்பனை பீர்பாட்டிலால் தாக்கிய 4 வாலிபர்கள் கைது
    X

    காவேரிப்பட்டணம் அருகே குடிபோதையில் நண்பனை பீர்பாட்டிலால் தாக்கிய 4 வாலிபர்கள் கைது

    • காயமடைந்த ஹக்கீம் வலியால் அலறினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷ்பாபு, சல்மான், தபுரேஷ், மதன்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல்.

    இவரது மகன் ஹக்கீம் (வயது32). கூலித்தொழிலாளியான இவரும், அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் பாபு என்கிற வெங்கடேஷ்பாபு (28), சல்மான் (30), தபுரேஷ் (24), மதன்குமார் (32) ஆகியோர் 4 பேரும் நண்பர்கள் ஆவர்.

    இந்த நிலையில் ஹக்கீமும், அவரது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கடந்த 17-ந் தேதி மது குடிக்க சென்றார். அப்போது போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து ஹக்கீமை கையால் தாக்கினர். பின்னர் அங்கிருந்த பீர்பாட்டில் அவரை சராமாரியாக 4 பேரும் சேர்ந்து தாக்கினர். இதில் காயமடைந்த ஹக்கீம் வலியால் அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஹக்கீமை மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து ஹக்கீம் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷ்பாபு, சல்மான், தபுரேஷ், மதன்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×