என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுமன்னார்கோவில் அருகே கனமழைக்கு வீட்டுசுவர் இடிந்து 3 பேர் காயம்
    X

    காயமடைந்த சோமசுந்தரம் சிகிச்சை பெறும் காட்சி


    காட்டுமன்னார்கோவில் அருகே கனமழைக்கு வீட்டுசுவர் இடிந்து 3 பேர் காயம்

    • இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் கிராம மக்கள் மீட்டனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
    • டி.புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா.கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம்.

    இவரது வீட்டுசுவர் கனமழையில் நனைந்து இருந்தது. நேற்றும் இந்த பகுதியில் விடாது மழை பெய்தது. தொடர் மழை காரணமாக சோமசுந்தரத்தின் வீட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

    இந்த இடிபாடுகளுக்குள் சோமசுந்தரம், அவரது மனைவி நிர்மலா, மகன் அய்யப்பன் ஆகியோர் சிக்கினர். அப்போது வலிதாங்கமுடியாமல் அலறிதுடித்தனர். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் கிராம மக்கள் மீட்டனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    உடனடியாக 3 பேரும் சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவகல்லூரி ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து டி.புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×