search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவர் தங்க கவச விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும்- கருணாஸ்
    X

    தேவர் தங்க கவச விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும்- கருணாஸ்

    • தேவர் ஜெயந்திவிழா முடிந்து, மீண்டும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமே வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
    • தேவர் ஜெயந்தி விழா முடிந்த பின்பு மீண்டும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவே வங்கிக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கமுதி:

    முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய சுதந்திர போராட்ட வீரரும், அரசியலிலும், ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கிய பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை கவுரவிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014-ம் ஆண்டு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார்.

    இந்த கவசம் அ.தி.மு.க.பொருளாளர் மற்றும் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் ஆகியோர் கையெழுத்திட்டு மதுரையில் உள்ள வங்கியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. 2017-ல் அ.தி.மு.க.வினர் இருதரப்பாக செயல்பட்ட போது நினைவாலய பொறுப்பாளர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தங்க கவசம் கொண்டுவரப்பட்டு தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.

    தேவர் ஜெயந்திவிழா முடிந்து, மீண்டும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமே வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அதே போல் தற்போதும் அ.தி.மு.க இரு தரப்பாக செயல்பட்டு வருவதால் இதனை அ.தி.மு.க. விவகாரம் என கருதாமல், பல கோடி மக்களின் உணர்வாக நினைத்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு மதுரை மாவட்ட நிர்வாகம் மூலம் வங்கியில் இருந்து எடுத்து, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம், தேவர் நினைவாலய பொறுப்பாளர் முன்னிலையில் பசும்பொனில் தேவர் சிலைக்கு அணிவிக்க வேண்டும்.

    தேவர் ஜெயந்தி விழா முடிந்த பின்பு மீண்டும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவே வங்கிக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×