என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்ணமங்கலம் அருகே கார்-வேன் மோதி கிரிவலம் சென்ற டாக்டர் உள்பட 2 பேர் பலி
    X

    கண்ணமங்கலம் அருகே கார்-வேன் மோதி கிரிவலம் சென்ற டாக்டர் உள்பட 2 பேர் பலி

    • வண்ணாங்குளம் அருகே வந்தபோது கார்-வேன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்தவர்கள் தயாநிதி, டாக்டர் சூரிய சேகர் ரெட்டி, மோனிகா, மதுமிதா. இவர்கள் அனைவரும் சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு காரில் சென்றனர்.

    கிரிவலம் முடிந்து ஊருக்கு புறப்பட்டு வந்தனர். வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பாக்கம் கிராமத்தில் இருந்து 20 பேர் கொண்ட ஆன்மீக குழு திருவண்ணாமலைக்கு அன்னதானம் வழங்குவதற்காக வேனில் சென்றனர்.

    வண்ணாங்குளம் அருகே வந்தபோது கார்-வேன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் பயணம் செய்த தயாநிதி மற்றும் டாக்டர் சூரியசேகர்ரெட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    காரில் இருந்த 2 பெண்களும், வேனில் இருந்து சிறுவனும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்ணமங்கலம் போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×