என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரத்தில் முதியவரிடம் ரூ.1¾ லட்சம் வழிப்பறி
    X

    காஞ்சிபுரத்தில் முதியவரிடம் ரூ.1¾ லட்சம் வழிப்பறி

    • முதியவரிடம் ரூ.1¾ லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள் அவர் பணப்பையை தர மறுத்ததால் 100 மீட்டர் தூரம் தரதரவென்று இழுத்து சென்றனர்.
    • ரத்தினகரனை அங்கு இருந்த பொதுமக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரத்தினகரன் (வயது 66). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வேலூரில் இருந்து வாலாஜாபாத் பகுதிக்கு வந்தார். அங்குள்ள ஒரு கடையில் வசூலான ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்தை பெற்று கொண்டு வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ரத்தினகரன் கையில் வைத்திருந்த பணப்பையை பறிக்க முயன்றனர். ரத்தினகரன் பணப்பையை விட மறுக்கவே அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை இயக்கியவாறு முதியவரை 100 மீட்டர் தொலைவுக்கு சாலையில் தரதரவென இழுத்து சென்று பணப்பையை பறித்து சென்றனர்.

    இதில் காயம் அடைந்த ரத்தினகரனை அங்கு இருந்த பொதுமக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவரிடம் விவரங்களை கேட்டறிந்து வழிப்பறியில் ஈடுபட்ட யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×