என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாய் குறுக்கே வந்ததால் விபத்து- மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
- நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த வயலூர் கிராமம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 24). இவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் வழக்கம்போல் சரவணன் பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
தலையில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த சரவணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மாகரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






