search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரத்தில் அதிகரிக்கும் போதை பொருள் விற்பனை?- விரைவில் ஒருசிலர் கைதாகுவர் என டி.ஐ.ஜி எச்சரிக்கை
    X

    மாமல்லபுரத்தில் அதிகரிக்கும் போதை பொருள் விற்பனை?- விரைவில் ஒருசிலர் கைதாகுவர் என டி.ஐ.ஜி எச்சரிக்கை

    • மாமல்லபுரத்தை பொறுத்தவரை சர்வதேச சுற்றுலாவிற்கு பெயர் போன இடமாக இருந்தாலும், இங்கு பல வகை போதை வஸ்துக்கள் ரகசியமாக விற்கப்படும் பகுதியாக உள்ளது என சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.
    • உளவுத்துறை போலீசார் அதனை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவர்களை தக்க ஆதாரங்களுடன் கைது செய்யவும் போலீசார் தயாராகி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் தனியார் கல்லூரியில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி சத்தியபிரியா தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், கல்லூரி முதல்வர், பேராசிரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மாணவர்களுக்கு அறிவுரைகளை கூறிய டி.ஐ.ஜி, மாமல்லபுரத்தை பொறுத்தவரை சர்வதேச சுற்றுலாவிற்கு பெயர் போன இடமாக இருந்தாலும், இங்கு பல வகை போதை வஸ்துக்கள் ரகசியமாக விற்கப்படும் பகுதியாக உள்ளது என சிலர் புகார் தெரிவித்துள்ளனர். உளவுத்துறை போலீசார் அதனை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவர்களை தக்க ஆதாரங்களுடன் கைது செய்யவும் போலீசார் தயாராகி வருகிறார்கள். இனி வரும் காலங்களில் இங்கு அடிக்கடி சர்வதேச விழாக்கள் நடக்க இருப்பதால் பாதுகாப்பும் அதிகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×