search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை
    X

    வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

    • கடந்த சில மாதங்களாக அன்பரசன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்தார்.
    • இதனை மனைவி அனுசுயா கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் குமரன் நகரை சேர்ந்தவர் அன்பரசன் (வயது34). தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில மாதங்களாக அன்பரசன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்தார்.

    இதனை மனைவி அனுசுயா கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த அன்பரசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×