என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆத்தூரில் ஊர்காவல் படை வீரர் திடீர் தற்கொலை
- விசாரணையில் ஹரிபாபு அவரது செல்போனில் உள்ள அனைத்து நம்பர்களையும் அழித்துவிட்டு தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
- ஊர்காவல்படை வீரர் ஹரிபாபு காதல் பிரச்சனையில் இருந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் கொத்தம்பாடி பெரியார் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஹரிபாபு (28). இவர் பி.எஸ்.சி பயோடெக் படித்துவிட்டு ஆத்தூர் ஊர்காவல் படையில் பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு இரவு தூங்க சென்றார். அதிகாலை 5 மணிக்கு அவரது தந்தை முருகேசன் எழுந்து பார்த்தபோது ஹரிபாபு தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து அவர் ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஹரிபாபு அவரது செல்போனில் உள்ள அனைத்து நம்பர்களையும் அழித்துவிட்டு தூக்கில் தொங்கியது தெரியவந்தது. ஊர்காவல்படை வீரர் ஹரிபாபு காதல் பிரச்சனையில் இருந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






