என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
- மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் தென் மாவட்டங்களுக்கு அதிக வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- சுங்கச்சாவடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தாம்பரம்:
தீபாவளி பண்டிகைக்காக சென்னை தாம்பரத்தில் சானிடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம் என 2 பஸ் நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி செல்லும் பஸ்களும், திண்டிவனம் வழியாக பண்ருட்டி நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
சென்னை புறநகர் பகுதியில் இருந்து செல்லக்கூடிய பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் தாம்பரம் சானிடோரிய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலைய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன.
மேலும் அதிக அளவில் பயணிகள் கூட்டம் சொந்த ஊர்களுக்கு செல்வதால் தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சீர்செய்து வருகின்றனர்.
மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாட்கள் என்பதால் நாளை முதல் சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் தென் மாவட்டங்களுக்கு அதிக வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த சுங்கச்சாவடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சுங்கச்சாவடி நிர்வாகம் மொத்தம் உள்ள 10 கட்டணம் வசூலிக்க மையங்கள் கூடுதலாக திறக்கப்பட்டு உள்ளன. வாகனம் இரு சாலையில் இயக்க தலா 5 கவுண்டர்கள் இயக்குவது வழக்கம்.
தென்மாவட்ட சாலையில் கூடுதலாக வாகனங்கள் செல்வதால் இந்த சமயத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதலாக இரண்டு சாலை பயன்படுத்துவதால் நெரிசல் என்பது மிக குறைவாகவே காணப்படுகிறது. அப்படி இருந்தும் வாகனங்கள் ஒரு சில சமயத்தில் அதிகபடியாக வருவதால் ஒரு கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
சென்னையை அடுத்த வண்டலூரில் இருந்து ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலை நகர், சிங்கபெருமாள்கோவில், மகேந்திரா தொழில் பூங்கா மற்றும் பரனூர் டோல்கேட் வரை சென்னை-திருச்சி தேசிய நேடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சிறப்பு காவல் படை போலீசார் ஆகியோர் வாகனங்களை போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு விபத்துகள் ஏற்படாது சரிசெய்தனர்.
அப்படியிருந்தும் வாகனங்கள் ஒவ்வொரு பகுதியை கடந்து செல்ல 30-நிமிடம் தாமதமானதாக வாகனங்களில் பயணம் செய்த பொதுமக்கள் கூறினர். காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டதால் பரனூர் சுங்கச்சாவடியில் 2 சக்கர வாகனங்கள் ஆட்டோ போன்ற வாகனங்கள் டோல்கேட் கடந்து மின் விளக்குகள் பொருத்தி தனிபாதைகள் அமைக்கப்பட்டது.
அந்தபாதையில் நெரிசல் இல்லாமல் பயணம் செய்தனர். பேருந்துகள் மற்றும் கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்தவர்கள் 30 நிமிடம் தாமதமாக கடந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்