என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் கனமழை: வெளிமாநில சுற்றுலா பயணிகள் தவிப்பு
- நகர வீதிகளில் மழைநீர் தேங்கும் முக்கிய பகுதியில், வடிகால் அடைப்பு ஏற்படாத வகையில் பேரூராட்சி ஊழியர்கள் கண்காணித்து தேங்கும் நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்தி வந்தனர்.
- ரோட்டின் நடுவே அழகிற்காக வைக்கப்பட்டிருந்த அரளி செடிகள் காற்றில் ஒடிந்து சாய்ந்து கிடந்தது. அவைகளை வெட்டி ஒழுங்குப்படுத்தினர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் நேற்று இரவு தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று காலை மாமல்லபுரம் வந்த வெளி மாநில சுற்றுலா பயணிகள் குழுவினர் திறந்த வெளியில் சமையல் செய்து சாப்பிட முடியாமலும், அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க முடியாமலும் பஸ் உள்ளேயே அமர்ந்து கொண்டு சிரமப்பட்டனர்.
நகர வீதிகளில் மழைநீர் தேங்கும் முக்கிய பகுதியில், வடிகால் அடைப்பு ஏற்படாத வகையில் பேரூராட்சி ஊழியர்கள் கண்காணித்து தேங்கும் நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்தி வந்தனர். ரோட்டின் நடுவே அழகிற்காக வைக்கப்பட்டிருந்த அரளி செடிகள் காற்றில் ஒடிந்து சாய்ந்து கிடந்தது. அவைகளை வெட்டி ஒழுங்குப்படுத்தினர்.
செங்கல்பட்டு மாவட்ட அளவில் இன்று காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 88.2 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது. மாமல்லபுரத்தில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
Next Story






