என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டி கொலையில் 70 வயது முதியவர் கைது
    X

    கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டி கொலையில் 70 வயது முதியவர் கைது

    • மூதாட்டி கொலையில் முதியவர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கொண்டமாநல்லூர் கிராமம் மேட்டுகாலனியை சேர்ந்தவர் சுலோசனா (வயது 62). இவரது கணவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சுலோச்சனா மட்டும் குடிசை வீட்டில் தனியே வசித்து வந்தார்.

    இந்த நிலையில், கடந்த 20-ந் தேதி வீட்டிற்குள் சுலோச்சனா வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏடூரைச்சேர்ந்த முதியவர் வீரராகவன் என்கிற வீரய்யா (வயது 70) என்பவரை போலீசார் கைது செய்தனர். கணவர் இறந்த பிறகு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சுலோச்சனாவிடம் வீரராகவன் நெருங்கி பழகி வந்து உள்ளார். ஒரு கட்டத்தில் வீரராகவனை, சுலோச்சனா வெறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த வீரராகவன், சம்பவத்தன்று இரவு சுலோச்சனாவின் வீட்டிற்குள் புகுந்து அவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி இருப்பது தெரிந்தது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. மூதாட்டி கொலையில் முதியவர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×