என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடுவாஞ்சேரியில் சாலையில் நடந்து சென்ற பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பு
- பெருமாட்டுநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
- சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு விஷ்ணுப்பிரியா நகர் பகுதியை சேர்ந்தவர் லலிதா (வயது 50), இவர் பெருமாட்டுநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது கணவர், குழந்தைகளுடன் கூடுவாஞ்சேரிக்கு சென்று குழந்தைகளுக்கு தேவையான பள்ளி உபகரண பொருட்களை வாங்கினார். பின்னர் இவரது கணவர், குழந்தைகளை மோட்டார் சைக்கிள்களில் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். லலிதா மட்டும் ஷேர் ஆட்டோ ஏறுவதற்காக சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி ரயில்வே ஸ்டேஷன் ரோடு சந்திப்பு அருகே செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் லலிதா கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்க செயினை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் லலிதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.






