search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்மிடிப்பூண்டி அருகே  புதிய கல்வி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார் ஆளுநர்
    X

    கும்மிடிப்பூண்டி அருகே புதிய கல்வி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார் ஆளுநர்

    • 25ஏக்கர் பரப்பில் அமைய உள்ள கல்வி நிறுவனத்தில் சிபிஎஸ்சி, ஐபி மற்றும் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தில் வழங்க உள்ளது.
    • எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டி அருகே ஏடூரில் உள்ள டாக்டர் செரியன் மெடிவில்லா வளாகத்தில் டாக்டர் கே.எம்.செரியன் எஜுகேஷனல் சொசைட்டி மற்றும் டாக்டர் கே.எம்.செரியன் ஹார்ட் பவுன்டேஷன் சார்பில் அமைக்கப்பட உள்ள தி ஸ்டடி குளோபல் கல்வி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதன் நிறுவன தலைவர் டாக்டர் கே.எம்.செரியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர் மருத்துவ குணம் வாய்ந்த மரக்கன்றுகளை நட்டார்.

    தொடர்ந்து விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஏடூரில் உள்ள பிராண்டியர் மெடிவில்லே எனப்படும் மருத்துவ கிராம் நாட்டின் முதல் உயிரியல் பூங்காவாக உள்ளது. இப்படிப்பட்ட ஆராய்ச்சி அமைப்போடு ஒரு கல்வி நிறுவனம் செயல்படும் போது, மற்ற கல்வி நிறுவனங்களில் பெற முடியாத ஆராய்ச்சி அறிவுடன் கூடிய தொழில்நுட்ப கல்வியை மாணவர்கள் பெற முடியும். மேலும் நமது பாரத பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையான ஆத்ம நிர்பர் பாரதத்தை உருவாக்க இந்த கல்வி நிறுவனம் மாணவர்களை ஆராய்ச்சியாளர்களாகவும், வல்லுனர்களாகவும் உருவாக்கும். இந்த கல்வி நிறுவனம் நாட்டின் அடையாளமாக மாறும் என்றார்.

    25ஏக்கர் பரப்பில் அமைய உள்ள இந்த கல்வி நிறுவனத்தில் சிபிஎஸ்சி, ஐபி மற்றும் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தில் வழங்க உள்ளது. இங்கு எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இங்கு செயற்கை நுண்ணறிவு, டிஷ்யூ என்ஜினியரிங், ரோபோடிக்ஸ், டிரோன் தொழில்நுட்பம், ஸ்டெம் செல்கள் குறித்தும் கற்றுத்தரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    நிகழ்வில் மொரீசியஸ் நாட்டின் கல்வி மற்றும் கலை கலாச்சார துறை அமைச்சரும், யுனெஸ்கோவில் ஆலோசகராகவும் உள்ள ஆறுமுகம் பரசுராமன், நிறுவன துணை தலைவர்கள் டாக்டர் சந்தியா செரியன், சஞ்சய் செரியன் ஆகியோருடன், கூடுதல் ஆட்சியர் ரிஷப், உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார்,வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், வட்டாட்சியர் கண்ணன், ஊராட்சி தலைவர்கள் எளாவூர் வள்ளி முருகேசன், ஏடூர் ரேவதி பங்கேற்றனர்.

    Next Story
    ×