என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலையில் தீ விபத்து
- ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் விநாயகா நகரில் குடியிருப்பு பகுதியில் மாதவரத்தைச் சேர்ந்த கெவின் என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் அரைக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பற்றி எரிந்து கரும் புகை வெளியேறியது. தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் அருகே இருந்த வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






