search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஞ்சு குடோனில் தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
    X

    பஞ்சு குடோனில் தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

    • மொரட்டுப்பாளையம் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
    • தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த எந்திரம், பஞ்சுகள், துணி ரகங்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ளது மொரட்டுப்பாளையம். இங்குள்ள கே.எஸ்.ஆர். நகர் பகுதியில் வேஸ்ட் துணிகளை பஞ்சாக மாற்றும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் இந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் திடீரென தீ மளமளவென கொளுந்து விட்டு பற்றி எரிந்தது.

    இதனால் மொரட்டுப்பாளையம் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதுகுறித்து உடனடியாக ஊத்துக்குளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

    இதனால் திருப்பூரில் இருந்து மேலும் 2 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து 10 தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டது.

    சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேற்றிரவு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த எந்திரம், பஞ்சுகள், துணி ரகங்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×