என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிதி உதவி
- நிகழ்ச்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கந்தன், இதயகுமார் ஆகியோருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
- ராமு, செந்தூர் முருகன் டிரேடர்ஸ் உரிமையாளர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கப்பட்ட திருவேங்கடபுரம், வேம்பாக்கம், தடப்பெரும்பாக்கம் சுற்று வட்டார வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி திருவேங்கடபுரம் சங்க அலுவலகத்தில் சங்க தலைவர் ஆர்.சுரேஷ்குமார் தலைமையில் தங்கராஜ், நாகராஜ், ரமேஷ், பிரதாப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சங்க செயலாளர் செல்ல துரை அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கந்தன், இதயகுமார் ஆகியோருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட தலைவர் டி.நந்தன், அமைப்பு செயலாளர் எஸ். வி. முருகன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் விக்னேஷ், உதயன், பாலச்சந்தர், மகேந்திரன், வழக்கறிஞர் சதீஷ் சரண் குமார், ராமு, செந்தூர் முருகன் டிரேடர்ஸ் உரிமையாளர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






