search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    28 ஆயிரம் வாக்குகளை பெற்று டெபாசிட்டை தக்க வைத்தது அ.தி.மு.க
    X

    28 ஆயிரம் வாக்குகளை பெற்று டெபாசிட்டை தக்க வைத்தது அ.தி.மு.க

    • முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். அவர் சுமார் 76,834 வாக்குகள் பெற்றுள்ளார்.
    • அ.தி.மு.க.வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 28,637 வாக்குகளை பெற்று டெபாசிட்டை தக்கவைத்துக்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேரும், 3-ம் பாலினத்த வர்கள் 25 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இந்த தேர்தலில் 82,138 ஆண் வாக்காளர்கள், 88,037 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். இது 74.79 சதவீத வாக்குப்பதிவாகும்.

    இதையடுத்து இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் 15 சுற்றுகளாக எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை 10 சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளது.

    முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். அவர் சுமார் 76,834 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 28,637 வாக்குகளை பெற்று டெபாசிட்டை தக்கவைத்துக்கொண்டார்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 4,210, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 607 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    இதனிடையே 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 7-வது சுற்று வாக்கு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×