என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேனி மாவட்டத்தில் கனமழை- வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி மரணம்
- வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மாயக்காள் என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
- உடனே அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. க.விலக்கு அருகே மாலைப்பட்டி கிராமத்தில் பெய்த கனமழையின்போது அப்பகுதியில் இருந்த ஒருவீட்டின் சுவர் இடிந்துவிழுந்தது.
இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மாயக்காள்(72) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story