என் மலர்
உள்ளூர் செய்திகள்

125 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கிய எடப்பாடி பழனிசாமி
- அ.தி.மு.க. சார்பாக அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 125 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள், மற்றும் பெண்களுக்கு சேலைகள், இனிப்புகள் வழங்கினார்.
- முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பகுதி செயலாளர்கள் சரவணன், யாதவ மூர்த்தி, முருகன், ஜெய்பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
எடப்பாடி பழனிசாமி தனது பிறந்தநாளையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சேலம் மாநகர் மாவட்டம் அ.தி.மு.க. சார்பாக அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 125 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள், மற்றும் பெண்களுக்கு சேலைகள், இனிப்புகள் வழங்கினார்.
அப்போது மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியம், முன்னாள் எம்.பி.பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பகுதி செயலாளர்கள் சரவணன், யாதவ மூர்த்தி, முருகன், ஜெய்பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story






