என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூரில் கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்
- அண்ணா மார்க்கெட் அருகே கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
- மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டனர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சியில் மஞ்சகுப்பம் நேதாஜி சாலையில் அண்ணா மார்க்கெட் அருகே கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இப்பணியினை மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து அண்ணா மார்க்கெட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை ஆணையாளர் மற்றும் துணை மேயரிடம் தெரிவித்தனர். அப்போது நகர் நல அலுவலர் ஜாபர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story






