search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூர் அருகே பெண்ணிடம் கந்துவட்டி பணம் கேட்டு மிரட்டிய தம்பதி கைது
    X
    கைதான இளவரசன், சித்ரா.

    மத்தூர் அருகே பெண்ணிடம் கந்துவட்டி பணம் கேட்டு மிரட்டிய தம்பதி கைது

    • கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கோடிபதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவரது மனைவி அம்பிகா.
    • கைதான சித்ராவை சேலம் மகளிர் சிறையிலும், இளவரசனை கிருஷ்ணகிரி சிறையிலும் அடைத்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கோடிபதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவரது மனைவி அம்பிகா.

    இந்த நிலையில் இவர் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த இளவரசன், இவரது மனைவி சித்ரா ஆகியோரிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் வட்டிக்கு வாங்கியுள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் வாங்கிய பணத்திற்கு வட்டியும், முதலும் கட்டாமல் அம்பிகா காலம் தாழ்த்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சித்ரா தனது கணவருடன் அம்பிகா வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அங்கு நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை. வட்டியும் அடைக்கவில்லை. அதனால் நீங்கள் வாங்கிய 1 லட்சத்து 20 ஆயிரம் பணம் எல்லாம் சேர்த்து 5 லட்சத்து 20 ஆயிரமாக கொடுக்க வேண்டும் என்று கூறினர். அம்பிகாவும், அவரது கணவரும் அவ்வளவு பணம் கொடுக்கமுடியாது என்றனர்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அம்பிகாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அம்பிகா மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பெண்ணிடம் கந்துவட்டி பணம் கேட்டு மிரட்டியதாக சித்ரா, இளவரசன் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்தனர்.

    கைதான சித்ராவை சேலம் மகளிர் சிறையிலும், இளவரசனை கிருஷ்ணகிரி சிறையிலும் அடைத்தனர்.

    Next Story
    ×