என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழனியில் தபால் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற காங்கிரஸ் நிர்வாகி
- சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் மனம் வேதனையடைந்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
- போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் நேரு என்பவர் பழனி தலைமை தபால் அலுவலகம் முன்பு மத்திய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பியபடி வந்தார்.
பின்னர் திடீரென தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் பழனி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீக்குளிக்க முயன்ற காங்கிரஸ் நிர்வாகியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் மனம் வேதனையடைந்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இதனைதொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் பழனி தபால் அலுவலகம் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.






