search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொடக்குறிச்சி அருகே விடுமுறையில் ஊருக்கு வந்த கல்லூரி மாணவி தற்கொலை
    X

    மொடக்குறிச்சி அருகே விடுமுறையில் ஊருக்கு வந்த கல்லூரி மாணவி தற்கொலை

    • கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • கல்லூரி மாணவி தற்கொலை குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (43). டெய்லர். இவரது கணவர் சிவபெருமாள். முறுக்கு வியாபாரி. இவர்களது மகள் பொற்கொடி (20). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் அந்த கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த பொற்கொடி தனக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்றும், மேலும் அடிக்கடி தாங்க முடியாத அளவுக்கு வயிற்று வலி ஏற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது தாய் பொற்கொடியை சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பினர்.

    இந்த நிலையில் தேர்வு விடுமுறைக்காக பொற்கொடி வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கினார். உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த பொற்கொடி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது தாய் பிரேமா மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×